மேல்மலையனூர் அருகே மட்டப்பாறை நகரில் சாலை வசதி இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள மண்சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.