வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் சரி செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த குழி மூடப்படாமல் மாதக்கணக்கில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குழியை விரைந்து மூடி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசிகுமார், அளவாய்ப்பட்டி.