கூடலூரில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்வதில்லை. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. தற்போது சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை. எனவே விரைவாக சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.