சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2025-08-17 17:40 GMT

மூலனூரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆடுகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில், ஆடுகள் சாலையின் குறுக்கே நிற்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். ஆடுகளை வைத்திருப்போர், அவை சாலைகளில் திரியும் நிலையை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆடுகள் தவறுதலாக வாகனங்களில் அடிபட்டு காயமடைந்தால், அதன் உரிமையாளர்கள் வாகன ஓட்டிகளிடம் பெரும்தொகையை இழப்பீடாகக் கோருவது வழக்கமாகிவிட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க ஆடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்