விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு தேவதானம் கிராத்தில் குமராண்டி கோவில் தெரு சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் மழை பெய்தால் இந்த சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை வசதி ஏற்படுத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?