பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரம்பலூர்-அரியலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த சுங்கச்சாவடி அகற்றப்பட்ட நிலையில் அந்த இடத்தில் இருந்த ஒரு கூண்டு மற்றும் மின்கம்பம் அகற்றப்படாமல் சாலையின் நடுவே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தையும், கூண்டையும் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.