விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் விஷ்ணுநகர் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?