பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த மேம்பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.