சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைவதுடன், அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.