பழனி பழைய தபால் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சாலை சேதமடைந்து மண்பாதையாக மாறியுள்ளது. மேலும் அந்த பாதையோரத்தில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை சேதமடைந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதோடு குப்பைகளையும் அகற்ற வேண்டும்.