கரூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் தோட்டக்குறிச்சி பகுதியில் சாலை வளைவாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிலர் வாகனங்களில் வேகமாக சென்று வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.