சேறும் சகதியுமான சாலை...

Update: 2025-07-20 08:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,பம்மல் பகுதியில் உள்ள கலைஞர் பிரதான சாலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு குழாய் பதிப்பதற்காக சாலைகள் வெட்டப்பட்டது. இதனால் சேதமடைந்த சாலையை தற்போதுவரை சீரமைக்கவில்லை. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும், அந்தவழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்