கடலூர் எஸ்.என்.சாவடி - இம்பீரியல் ரோடு இணைப்புச்சாலையின் நடுவே பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனஓட்டிகள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.