திருப்பூர் செவந்தாம் பாளையம் - முத்தனம் பாளையம் செல்லும் வழியில் தீரன் சின்னமலை நகருக்கு அருகில் ஒரு பெயர் பலகை உள்ளது. அந்தப் பலகை எதற்காக இங்கே உள்ளது என்று இதுவரை தெரியவில்லை. மேலும் அந்தப்பலகை எந்த விவரமும் இல்லாமல் காணப்படுகிறது. அதனால் அந்தப்பெயர்ப் பலகையில் உரிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.