நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2025-07-13 07:02 GMT

அஞ்சுகிராமம் அருகே உள்ள பிச்சைக்குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. தற்போது பேரூராட்சி சார்பில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால், இந்த சாலை வழியாக அளவுக்கு அதிகமான பாரத்தோடு ஏராளமான கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்கின்றன. இந்த சாலையின் அருகில் அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, மீன்சந்தை, திருமண மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் சாலையும் சேதமடையும் நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் கனகர வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

-தங்கராஜா, பிச்சைக்குடியிருப்பு.

மேலும் செய்திகள்