நெல்லை அருகே தருவையில் இருந்து கீழ ஓமநல்லூர் வழியாக சிங்கிகுளம் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.