தர்மபுரி மாவட்டம் அரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தொட்டம்பட்டி ரோட்டில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாலா, அரூர்.