கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தாராபுரம் சாலை போலீஸ் நிலையத்திலிருந்து எட்டியாக்கவுண்டனூர் கோவிலூர் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த நிலையில் இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குடியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.