சிவகங்கை நகரில் பிரதான சாலையான காந்தி வீதி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும் பள்ளம் உள்ளது. மேலும் சிறுமழை பெய்தாலே இந்த பள்ளத்தில் அதிக தண்ணீர் நிரம்பி காட்சியளிப்பதால் இந்த பள்ளத்தை அறியாத வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இதுகுறித்து ‘மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.