பாபநாசம் உப்பளபாடி பகுதியில் இளங்கார்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பிரதான சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்களும் மிகுந்த சிரமத்துடன் அந்த சாலை வழியாக சென்று வருகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.