சாலையில் பெரிய பள்ளம்

Update: 2025-06-29 12:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் உள்ள புதுப்பட்டி சேங்கை ஊரணி புதுவளவு சாலை பகுதியில் சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு அதில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது