திருவள்ளூர் மாவட்டம், மணலி புது நகர் பகுதியில் உள்ள சாலைகளில் கழிவு நீர் கால்வாய் பணிகள் நடைபெற்றது. இதன்காரணமாக இந்த சாலைகள் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையின் வழியாக வாகனத்தில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.