கோவை அருகே வெள்ளக்கிணறு-சமத்துவபுரம் சாலையில் பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். குறிப்பாக என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில்தான் இயக்கப்படுகின்றன. இதனால் சாலை மோசமான நிலைக்கு சென்று வருகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.