போடி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தில் இருந்து தேனி செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் சாலை மேலும் பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேட்டை உருவாக்குகிறது. இதனை சரிசெய்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்