வி்க்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் வழியாக தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.