அரூர் பஸ் நிலையத்திற்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க பஸ் நிலையத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழியிலும், தனியார் மருத்துவமனை அருகேயும், பிரபல துணிக்கடை அருகேயும் வேக்கத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
-மணி, அரூர்.