பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், மாக்காய்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.