வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2025-06-22 12:32 GMT

பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் அம்பேத்கர் சிலை முதல் பாடைமாற்றி வரை கடந்த சில மாதங்களுக்கு முன் செங்குணம் ஊராட்சியின் 2025-25-ம் ஆண்டு சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போது தொடக்கப்பள்ளி அருகில் உட்பட சில இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை மோதி நிலை தடுமாறி செல்லும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வேகத்தடையில் வெள்ளைவர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது