கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் மேலும் சேதமடைந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு பயன்படாத சாலைகளாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.