கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. இந்த பகுதிகளில் சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களை வாகன ஓட்டிகளால் சரிவர பார்க்க முடிவது இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களையும் பதம் பார்க்கின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.