பட்டுக்கோட்டையை அடுத்த துறவிக்காடு ஊராட்சி நரியங்காட்டில் இருந்து வளசக்காடு சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.