நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பெருவிளையில் அம்மன்கோவில் தெரு உள்ளது. இந்த தெருச்சாலையின் நடுவே குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. பணிகள் முடிவடைந்து பல நாட்களாகியும் இதுவரை சாலை சீரமைப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெக்ஸ், மேலப்பெருவிளை.