அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி- கீழ்வானி மெயின் ரோட்டில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரம் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?