மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே, கொசுக்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.