விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் செல்லக்கூடிய டி.பி. மில்ஸ் ரோடு சேதமடைந்த குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும்ம் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.