மேல்மலையனூர் அருகே ஈயக்குணம் கிராமத்தில் இருந்து கொசப்பாளையம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.