பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் ஆலந்துறை அம்மன் கோவில் நுழைவுவாயில் பகுதியில் செல்லும் தார்சாலை வழியாக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. இந்த லாரிகள் கிரசர் மண்களை எடுத்துச் செல்லும்போது, தார்ப்பாய் அமைக்காமல் செல்வதால் மண்கள் சாலையில் விழுந்து வருகின்றன. இதனால் வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதிகள் பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டுகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.