பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2025-06-15 12:25 GMT

கோவை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி கண்ணன் நகரில் சாலை பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். நடந்து செல்லும் முதியவர்களும், சிறுவர்களும் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்