கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, குழிகளை மூட ஜல்லிக்கற்கள், மணல் கலவையை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.