கும்பகோணம் வட்டம் பழவத்தான்கட்டளை பகுதி விவேகானந்தா நகரில் காரைக்கால் சாலை-செக்காங்கண்ணி ரெயில்வேகேட் வரை சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.