திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் இருந்து ஏகாட்டூர் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் சாலை கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக தினமும் பள்ளி கல்லூரிக்கு சென்று வரும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். இனி வரும் மழைக்காலங்களில் இந்த குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.