திருவட்டார் அருகே செவரக்கோடு சந்திப்பில் இருந்து கண்ணங்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழை நேரங்களில் வாகன ஓட்டிகள் 1 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண்லெனின், ஏற்றக்கோடு.