விபத்து அபாயம்

Update: 2025-06-15 08:01 GMT

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இரு ஓரங்களிலும் மிகவும் பள்ளமாக காணப்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் எதிரே வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரங்களில் உள்ள பள்ளத்தை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜியோ, குளச்சல்.

மேலும் செய்திகள்