அரசூர் கூட்டுரோடு பிரதான சாலை பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வா்ணம் பூசப்படவில்லை. இதனால் அவ்வழியாக சென்றுவரும் இருசக்கர வாகனஓட்டிகள் வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து வேகத்தடையில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.