ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து பிருந்தா வீதி செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?