அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?