சாலை நடுவே மின்கம்பம்

Update: 2025-06-08 11:17 GMT

தஞ்சையை அடுத்த கத்தரிநத்தம் கிராமம் மகேஷ்நகர் முதல் தெருவில் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவர் சாலை நடுவே மின்கம்பம் இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், அந்த வழியாக வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்