குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-08 09:46 GMT

அரியலூர் மாவட்டம் நாகமங்கலத்தில் இருந்து பட்டாங்குறிச்சி வழியாக விக்கிரமங்கலம் வரை செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலை மண் சாலைபோல் காட்சி அளிப்பதால் நான்கு சக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது பலத்த காற்றினால் புழுதி ஏற்படுகிறது. இதனால் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டுகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்