அரியலூர் நகரில் செந்துறை சாலை நுழைவாயில் முதல் இருசு குட்டை வரை இருபுறமும் பல்வேறு கடையில் செயல்பட்டு வருகிறது. இந்த சாலையை விட அதிக உயரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.