குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2025-06-08 09:44 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் தார் சாலையில் இருந்து பேச்சுப்பாறை மற்றும் புகழூர் ரெயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தற்போது இந்த சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றார். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்